டெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவர உள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தனது அரசை கவிழ்க்க பாஜக திட்டமிட்டு வருவதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். ஒருமுறை பெரும்பான்மை நிரூபித்துவிட்டால், 6 மாதத்திற்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியாது.
பொய் வழக்குகளைப் போட்டு மற்ற மாநிலங்களில் கட்சிகளைப் பிளவுபடுத்துவதையும், அரசுகளைக் கவிழ்வதையும் பார்க்க முடிகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை மதுபான கொள்கை வழக்கில் கைது செய்ய நினைக்கிறார்கள்.
டெல்லி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்று தெரிந்ததால், அரசைக் கவிழ்க்க நினைக்கிறார்கள். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பிரிந்து செல்லவில்லை, அவர்கள் அனைவரும் அப்படியே இருக்கிறார்கள் என்பதை மக்களுக்குக் காட்டவே, நான் ஒரு நம்பிக்கை தீர்மானத்தை முன்வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
The post டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.